கோவை ரேஸ்கோர்ஸில் உலக மின்சார வாகன தின விழிப்புணர்வு பேரணி

கோவை ரேஸ்கோர்ஸில் உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர்.


Coimbatore: உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மின்சார வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9 அன்று உலக மின்சார வாகன தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, மின்சார வாகனங்களின் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மின்சார வாகன பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் Kranthi Kumar Pati, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் M Sivaguru Prabhakaran ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும் என்ற நோக்கிலும், மின்சார வாகனங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் SSEM கோவை சார்பில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.



இந்த பேரணியில் 50க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணியானது ரேஸ்கோர்ஸ் வருமானவரித்துறை அலுவலகத்தில் துவங்கி, அதே இடத்தில் நிறைவடைந்தது. SSEM சார்பில் மூன்றாவது முறையாக இந்த மின்சார வாகன பேரணி நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மஹிந்திரா - ஜெயம் ஆட்டோ வடிவமைத்த, கல்கி திரைப்பட புகழ் 'புஜ்ஜி' கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த கார் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த விழிப்புணர்வு பேரணி மூலம் மின்சார வாகனங்களின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...