கோவை ரேஸ்கோர்ஸில் உலக மின்சார வாகன தின விழிப்புணர்வு பேரணி

கோவை ரேஸ்கோர்ஸில் உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர்.


Coimbatore: உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மின்சார வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9 அன்று உலக மின்சார வாகன தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, மின்சார வாகனங்களின் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மின்சார வாகன பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் Kranthi Kumar Pati, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் M Sivaguru Prabhakaran ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும் என்ற நோக்கிலும், மின்சார வாகனங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் SSEM கோவை சார்பில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.



இந்த பேரணியில் 50க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணியானது ரேஸ்கோர்ஸ் வருமானவரித்துறை அலுவலகத்தில் துவங்கி, அதே இடத்தில் நிறைவடைந்தது. SSEM சார்பில் மூன்றாவது முறையாக இந்த மின்சார வாகன பேரணி நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மஹிந்திரா - ஜெயம் ஆட்டோ வடிவமைத்த, கல்கி திரைப்பட புகழ் 'புஜ்ஜி' கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த கார் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த விழிப்புணர்வு பேரணி மூலம் மின்சார வாகனங்களின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...