கோவை ரேஸ்கோர்ஸில் உலக மின்சார வாகன தின விழிப்புணர்வு பேரணி

கோவை ரேஸ்கோர்ஸில் உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர்.


Coimbatore: உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மின்சார வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9 அன்று உலக மின்சார வாகன தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, மின்சார வாகனங்களின் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மின்சார வாகன பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் Kranthi Kumar Pati, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் M Sivaguru Prabhakaran ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும் என்ற நோக்கிலும், மின்சார வாகனங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் SSEM கோவை சார்பில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.



இந்த பேரணியில் 50க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணியானது ரேஸ்கோர்ஸ் வருமானவரித்துறை அலுவலகத்தில் துவங்கி, அதே இடத்தில் நிறைவடைந்தது. SSEM சார்பில் மூன்றாவது முறையாக இந்த மின்சார வாகன பேரணி நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மஹிந்திரா - ஜெயம் ஆட்டோ வடிவமைத்த, கல்கி திரைப்பட புகழ் 'புஜ்ஜி' கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த கார் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த விழிப்புணர்வு பேரணி மூலம் மின்சார வாகனங்களின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...