கோவை வெள்ளலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஸ்டெம் லேப் திறப்பு விழா: 'கோயம்புத்தூர் அறிவியல் தொழில்நுட்பத்தின் மையம்' - மாவட்ட ஆட்சியர்

கோவை வெள்ளலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜிடி நாயுடு அறக்கட்டளை சார்பில் ஸ்டெம் லேப் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கலந்துகொண்டு, கோயம்புத்தூர் அறிவியல் தொழில்நுட்பத்தின் மையமாக திகழ்வதாக பாராட்டினார்.



Coimbatore: கோவை மாவட்டம் வெள்ளலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜிடி நாயுடு அறக்கட்டளை சார்பில் நிறுவப்பட்டுள்ள ஸ்டெம் (STEM - Science Technology Engineering Mathematics) லேப் திறப்பு விழா செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டார்.

விழாவில் ஜிடி நாயுடு அறக்கட்டளையின் அறங்காவலர் அகிலா சண்முகம், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகள், வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.



மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தனது உரையில், "கோயம்புத்தூர் மாவட்டம் அறிவியல் தொழில்நுட்பத்திற்கான மையமாக திகழ்கிறது. ஜிடி நாயுடு பல்வேறு கண்டுபிடிப்புகள் மூலம் சாதனை படைத்துள்ளார். புத்தகப் படிப்பையும் தாண்டி நேரடி சோதனை முயற்சிகள் செய்வதன் மூலம் புதுவித அனுபவத்தை பெறலாம்," என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும், "முதலாவது லேப் அரசூர் பள்ளியில் தொடங்கப்பட்டது மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது வெள்ளலூர் பள்ளியில் நிறுவப்பட்டுள்ள ஸ்டெம் லேப் மாணவர்களை உத்வேகப்படுத்தி, பெரும்பாலான மாணவர்களை அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுகள் நோக்கி நகர்த்தும்," என்று நம்பிக்கை தெரிவித்தார்.



பின்னர், மாவட்ட ஆட்சியர் பள்ளியில் நிறுவப்பட்டுள்ள ஸ்டெம் லேபை திறந்து வைத்து பார்வையிட்டார். லேபில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து கேட்டறிந்த அவர், ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி மாணவிகள் செய்து காட்டிய அறிவியல் செயல்முறை விளக்கங்களையும் கவனமாக பார்வையிட்டார்.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...