உடுமலையில் விநாயகர் சிலை ஊர்வலம்: இளம் பெண்கள் நடனமாடி உற்சாகம்

உடுமலையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 250 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இளம் பெண்கள் நடனமாடி உற்சாகம் அளித்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கடந்த 7-ம் தேதி 385 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.



இன்று இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 250 சிலைகள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து சிலைகளை மடத்துக்குளம் அமராவதி ஆற்றுக்கு கொண்டு சென்று கரைக்கும் நிகழ்வு இன்று மாலை 6 மணிக்கு தொடங்கியது.



விநாயகர் ஊர்வலத்தை பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி மற்றும் உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



இதையடுத்து செண்டை வாத்தியம் முழங்க வான வேடிக்கையுடன் இளம் பெண்கள் உற்சாக நடனத்துடன் கல்பனா சாலை, கச்சேரி வீதி, பெரிய கடை வீதி, பழனி ரோடு வழியாக ஊர்வலம் அமராவதி ஆற்றை நோக்கி சென்றது.

ஊர்வலத்தை யொட்டி உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு வெ.ஆறுமுகம் தலைமையிலான போலீசார் முன்னே செல்ல ஊர்வலம் அதைத் தொடர்ந்து சென்றது. ஊர்வலத்தை யொட்டி உடுமலை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...