உடுமலையில் விநாயகர் சிலை ஊர்வலம்: இளம் பெண்கள் நடனமாடி உற்சாகம்

உடுமலையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 250 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இளம் பெண்கள் நடனமாடி உற்சாகம் அளித்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கடந்த 7-ம் தேதி 385 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.



இன்று இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 250 சிலைகள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து சிலைகளை மடத்துக்குளம் அமராவதி ஆற்றுக்கு கொண்டு சென்று கரைக்கும் நிகழ்வு இன்று மாலை 6 மணிக்கு தொடங்கியது.



விநாயகர் ஊர்வலத்தை பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி மற்றும் உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



இதையடுத்து செண்டை வாத்தியம் முழங்க வான வேடிக்கையுடன் இளம் பெண்கள் உற்சாக நடனத்துடன் கல்பனா சாலை, கச்சேரி வீதி, பெரிய கடை வீதி, பழனி ரோடு வழியாக ஊர்வலம் அமராவதி ஆற்றை நோக்கி சென்றது.

ஊர்வலத்தை யொட்டி உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு வெ.ஆறுமுகம் தலைமையிலான போலீசார் முன்னே செல்ல ஊர்வலம் அதைத் தொடர்ந்து சென்றது. ஊர்வலத்தை யொட்டி உடுமலை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...