அமெரிக்காவில் ரூ.4000 கோடி முதலீடு ஈர்த்த முதல்வர் - அமைச்சர் முத்துசாமி பெருமிதம்

கோவையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.96.47 கோடி கடன் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் முத்துசாமி பேசினார். முதல்வரின் அமெரிக்கப் பயணம் குறித்தும், மகளிர் குழுக்களின் முக்கியத்துவம் பற்றியும் அவர் விளக்கினார்.



கோவை: கோவையில் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.



இந்நிகழ்வில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு கோவை மாவட்டத்தில் உள்ள 1,727 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுமார் ரூ.96.47 கோடி கடன்களை வழங்கினார்.



நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் முத்துசாமி, "கோவை மாவட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு ரூ.96.47 கோடிக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை முறையாக ஒருங்கிணைத்து பணியாற்றிய ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார்.

மகளிர் சுயஉதவிக் குழுக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், "மகளிர் சுயஉதவிக் குழு கலைஞர் கொண்டு வந்த மகத்தான திட்டம். தற்போதைய முதல்வர் மகளிருக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். சுயஉதவிக் குழுக்களை பொருத்தவரை முதல்வர் தனி கவனம் செலுத்துகிறார்," என்று குறிப்பிட்டார்.

முதல்வரின் அமெரிக்கப் பயணம் குறித்தும் அமைச்சர் பேசினார். "அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் இதுவரை 11 நிறுவனங்களுடன் தமிழகத்தில் முதலீடு செய்ய ரூ.4,000 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 5,000-க்கும் மேற்பட்டோருக்கு நேரடியான வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.

மேலும், "வெளிமாநிலங்களில் இருந்து பார்ப்போருக்கு நமது திட்டங்கள் பெரிய திட்டங்களாக தெரிகிறது," என்று அமைச்சர் முத்துசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...