உலக பிசியோதெரபி தினம்: மேட்டுப்பாளையம் முதியோர் இல்லத்தில் இலவச மருத்துவ முகாம்

உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு, ரிலீப் பிசியோ கிளினிக் மேட்டுப்பாளையத்தில் உள்ள விஸ்வநாத செட்டியார் முதியோர் இல்லத்தில் இலவச பிசியோதெரபி முகாமை நடத்தியது. 70 முதியோர்கள் பயனடைந்தனர்.


கோவை: உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு இன்று மேட்டுப்பாளையத்தில் உள்ள விஸ்வநாத செட்டியார் முதியோர் இல்லத்தில் ரிலீப் பிசியோ கிளினிக் சார்பில் இலவச பிசியோதெரபி முகாம் நடைபெற்றது.



இந்த முகாமில் ரிலீப் பிசியோ கிளினிக் மருத்துவர் கோகிலாஸ்ரீ தலைமையிலான மருத்துவக் குழுவினர் பங்கேற்று சிறப்பாக நடத்தினர். இந்த முகாமில் 70 முதியோர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



முகாமில் பங்கேற்ற முதியோர்களுக்கு கை, கால் வலி, மூட்டு வலி, கழுத்து வலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வலியில்லா நிவாரணம் மற்றும் எளிய பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதனால் பெரிதும் மகிழ்ச்சியடைந்த முதியோர்கள், ரிலீப் பிசியோ கிளினிக் மருத்துவர் கோகிலாஸ்ரீ, மருத்துவர் பெர்னாண்டஸ் பிராங்க்ளின் உள்ளிட்ட மருத்துவக் குழுவினருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்தனர்.

இந்த இலவச மருத்துவ முகாம் ஆதரவற்ற முதியோர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. இது போன்ற முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று முதியோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...