உலக பிசியோதெரபி தினம்: மேட்டுப்பாளையம் முதியோர் இல்லத்தில் இலவச மருத்துவ முகாம்

உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு, ரிலீப் பிசியோ கிளினிக் மேட்டுப்பாளையத்தில் உள்ள விஸ்வநாத செட்டியார் முதியோர் இல்லத்தில் இலவச பிசியோதெரபி முகாமை நடத்தியது. 70 முதியோர்கள் பயனடைந்தனர்.


கோவை: உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு இன்று மேட்டுப்பாளையத்தில் உள்ள விஸ்வநாத செட்டியார் முதியோர் இல்லத்தில் ரிலீப் பிசியோ கிளினிக் சார்பில் இலவச பிசியோதெரபி முகாம் நடைபெற்றது.



இந்த முகாமில் ரிலீப் பிசியோ கிளினிக் மருத்துவர் கோகிலாஸ்ரீ தலைமையிலான மருத்துவக் குழுவினர் பங்கேற்று சிறப்பாக நடத்தினர். இந்த முகாமில் 70 முதியோர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



முகாமில் பங்கேற்ற முதியோர்களுக்கு கை, கால் வலி, மூட்டு வலி, கழுத்து வலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வலியில்லா நிவாரணம் மற்றும் எளிய பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதனால் பெரிதும் மகிழ்ச்சியடைந்த முதியோர்கள், ரிலீப் பிசியோ கிளினிக் மருத்துவர் கோகிலாஸ்ரீ, மருத்துவர் பெர்னாண்டஸ் பிராங்க்ளின் உள்ளிட்ட மருத்துவக் குழுவினருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்தனர்.

இந்த இலவச மருத்துவ முகாம் ஆதரவற்ற முதியோர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. இது போன்ற முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று முதியோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...