கோவை உருமாண்டம்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் 32வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா

கோவை உருமாண்டம்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் 32வது ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கணபதி ஹோமம், விநாயகர் ஊர்வலம், திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம் ஆகியவை நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாக அமைந்தன.



Coimbatore: கோவை உருமாண்டம்பாளையத்தில் இந்து முன்னணி சார்பாக 32வது ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

விழாவின் ஒரு முக்கிய நிகழ்வாக, ஜி.என்.மில்ஸ் எல்லை மாகாளியம்மன் திருக்கோவிலிலிருந்து உருமாண்டம்பாளையம் மாகாளியம்மன் திருக்கோவிலுக்கு விநாயகர் அலங்கார சாரட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இந்த ஊர்வலத்தில் கேரளத்து செண்டை மேளம் முழங்க, சிங்காரி மேளத்துடன் ஜமாத் அடித்து விநாயகர் அழைத்து வரப்பட்டார்.



மாலை 7 மணி அளவில் 251 பெண் பக்தர்கள் ஒரே வண்ண ஆடையில் கலந்து கொண்ட திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், குத்துவிளக்கு, மஞ்சள், குங்குமம், மஞ்சள் சரடு, அரிசி, வளையல், பழங்கள், வெற்றிலை, பாக்கு, உதிரிபூக்கள் ஆகியவற்றை வைத்து பூஜைகள் தொடங்கப்பட்டன.



பின்னர் 108 அம்மன் போற்றி பாடல்கள் பாடப்பட்டு திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியில், அங்கு கூடியிருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...