கோவை உருமாண்டம்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் 32வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா

கோவை உருமாண்டம்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் 32வது ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கணபதி ஹோமம், விநாயகர் ஊர்வலம், திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம் ஆகியவை நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாக அமைந்தன.



Coimbatore: கோவை உருமாண்டம்பாளையத்தில் இந்து முன்னணி சார்பாக 32வது ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

விழாவின் ஒரு முக்கிய நிகழ்வாக, ஜி.என்.மில்ஸ் எல்லை மாகாளியம்மன் திருக்கோவிலிலிருந்து உருமாண்டம்பாளையம் மாகாளியம்மன் திருக்கோவிலுக்கு விநாயகர் அலங்கார சாரட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இந்த ஊர்வலத்தில் கேரளத்து செண்டை மேளம் முழங்க, சிங்காரி மேளத்துடன் ஜமாத் அடித்து விநாயகர் அழைத்து வரப்பட்டார்.



மாலை 7 மணி அளவில் 251 பெண் பக்தர்கள் ஒரே வண்ண ஆடையில் கலந்து கொண்ட திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், குத்துவிளக்கு, மஞ்சள், குங்குமம், மஞ்சள் சரடு, அரிசி, வளையல், பழங்கள், வெற்றிலை, பாக்கு, உதிரிபூக்கள் ஆகியவற்றை வைத்து பூஜைகள் தொடங்கப்பட்டன.



பின்னர் 108 அம்மன் போற்றி பாடல்கள் பாடப்பட்டு திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியில், அங்கு கூடியிருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...