கோவை உருமாண்டம்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் 32வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா

கோவை உருமாண்டம்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் 32வது ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கணபதி ஹோமம், விநாயகர் ஊர்வலம், திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம் ஆகியவை நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாக அமைந்தன.



Coimbatore: கோவை உருமாண்டம்பாளையத்தில் இந்து முன்னணி சார்பாக 32வது ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

விழாவின் ஒரு முக்கிய நிகழ்வாக, ஜி.என்.மில்ஸ் எல்லை மாகாளியம்மன் திருக்கோவிலிலிருந்து உருமாண்டம்பாளையம் மாகாளியம்மன் திருக்கோவிலுக்கு விநாயகர் அலங்கார சாரட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இந்த ஊர்வலத்தில் கேரளத்து செண்டை மேளம் முழங்க, சிங்காரி மேளத்துடன் ஜமாத் அடித்து விநாயகர் அழைத்து வரப்பட்டார்.



மாலை 7 மணி அளவில் 251 பெண் பக்தர்கள் ஒரே வண்ண ஆடையில் கலந்து கொண்ட திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், குத்துவிளக்கு, மஞ்சள், குங்குமம், மஞ்சள் சரடு, அரிசி, வளையல், பழங்கள், வெற்றிலை, பாக்கு, உதிரிபூக்கள் ஆகியவற்றை வைத்து பூஜைகள் தொடங்கப்பட்டன.



பின்னர் 108 அம்மன் போற்றி பாடல்கள் பாடப்பட்டு திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியில், அங்கு கூடியிருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...