கோவை ரேஸ்கோர்ஸில் 'ஹிஜாப் சவால்' வீடியோ: யூடியூபர் கைது

கோவை ரேஸ்கோர்ஸில் நடைபயிற்சிக்கு வந்த பெண்களுக்கு 'ஹிஜாப் சவால்' என்ற பெயரில் வீடியோ எடுத்த யூடியூபர் அனஸ் அகமது கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சிக்கு வந்த பெண்களுக்கு 'ஹிஜாப் சவால்' என்ற பெயரில் வீடியோ எடுத்து யூடியூபில் வெளியிட்ட யூடியூபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.



குன்னூரைச் சேர்ந்த அனஸ் அகமது என்ற யூடியூபர், கடந்த செப்டம்பர் 3-ம் தேதி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சிக்கு சென்ற இளம்பெண்களிடம் 'ஹிஜாப் சவால்' என்ற பெயரில், ஹிஜாப் அணிந்து பார்க்க விருப்பமா என தொகுப்பாளரை வைத்து கேள்வி கேட்க வைத்தார். விருப்பமுள்ள சில பெண்கள் ஹிஜாப் அணிந்தும் பார்த்தனர். பின்னர் ஹிஜாபுடன் இருக்கும் புகைப்படங்களை இளம் பெண்களிடம் தொகுப்பாளர் காட்டினார்.

இந்த வீடியோ குறிப்பிட்ட யூடியூப் பக்கத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கணபதி பகுதியைச் சேர்ந்த 'பாரத் சேனா' என்ற அமைப்பைச் சேர்ந்த குமரேசன், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் யூடியூப் பக்கத்தை நடத்தியவர், வீடியோவை பதிவு செய்தவர் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. யூடியூப் சேனலின் உரிமையாளர் அனஸ் அகமது செப்டம்பர் 7-ம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதி, அனஸ் அகமதுவை வரும் செப்டம்பர் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...