உடுமலையில் விநாயகர் சதுர்த்தி விழா: பக்தி இன்னிசை நிகழ்ச்சி மற்றும் அன்னதானம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கணபதி ஹோமம், அபிஷேகம், பக்தி இன்னிசை நிகழ்ச்சி மற்றும் அன்னதானம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஐஸ்வர்யா நகரில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கற்பக விநாயகர் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவிற்கு அறக்கட்டளை தலைவர் அரிமா லோகநாதன் தலைமை வகித்தார்.

விழாவின் ஒரு பகுதியாக, கணபதி ஹோமம், அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை ஆகியவை நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, திருமறை திருப்புகழ் நாமவளி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சிக்கு உடுமலை மக்கள் பேரவை தலைவர் யு.கே.பி முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார்.



டாக்டர் சம்பத்குமார் மற்றும் நகர மன்ற உறுப்பினர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவில், பாலகிருஷ்ணன் நன்றியுரை வழங்கினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கற்பக விநாயகர் அறக்கட்டளை சார்பில் மேற்கொண்டிருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...