உடுமலையில் விநாயகர் சதுர்த்தி விழா: பக்தி இன்னிசை நிகழ்ச்சி மற்றும் அன்னதானம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கணபதி ஹோமம், அபிஷேகம், பக்தி இன்னிசை நிகழ்ச்சி மற்றும் அன்னதானம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஐஸ்வர்யா நகரில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கற்பக விநாயகர் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவிற்கு அறக்கட்டளை தலைவர் அரிமா லோகநாதன் தலைமை வகித்தார்.

விழாவின் ஒரு பகுதியாக, கணபதி ஹோமம், அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை ஆகியவை நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, திருமறை திருப்புகழ் நாமவளி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சிக்கு உடுமலை மக்கள் பேரவை தலைவர் யு.கே.பி முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார்.



டாக்டர் சம்பத்குமார் மற்றும் நகர மன்ற உறுப்பினர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவில், பாலகிருஷ்ணன் நன்றியுரை வழங்கினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கற்பக விநாயகர் அறக்கட்டளை சார்பில் மேற்கொண்டிருந்தனர்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...