கோவை செட்டி வீதி அருகே இளைஞர் துரத்தி வெட்டிக் கொலை

கோவை செட்டி வீதி அருகே, மது போதையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கெம்பட்டி காலனியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கோகுல் துரத்தப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பாலாஜி அவென்யூ பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் அரிவாள் மற்றும் கட்டை பயன்படுத்தப்பட்டது.


கோவை: கோவை செட்டி வீதி அருகே இளைஞர் ஒருவர் துரத்தப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கெம்பட்டி காலனியைச் சேர்ந்த கோகுல் (24) என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். மது போதையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த கொலைக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

பாலாஜி அவென்யூ பகுதியில் கோகுலை எதிர்தரப்பு இளைஞர்கள் துரத்தியதாகவும், பின்னர் அரிவாளால் வெட்டியும் கட்டையால் தாக்கியும் கொலை செய்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையாக காயமடைந்த நிலையில், ரத்தம் வடிந்தபடி ஓடி ஒளிந்த கோகுல் உயிரிழந்துள்ளார். சாலையில் தெரிந்த ரத்தத்தைப் பின்தொடர்ந்து சென்ற பொதுமக்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கோகுலின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையில் ஈடுபட்டவர்களை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...