தாராபுரத்தில் இந்து முன்னேற்றக் கழகத்தின் முதலாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து முன்னேற்றக் கழகத்தின் முதலாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விசர்ஜன ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. மூன்று விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர மற்றும் ஒன்றிய பகுதியில் இந்து முன்னேற்றக் கழகத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெற்றது.



இந்த விழாவின் ஒரு பகுதியாக, தாராபுரத்தில் உள்ள திருப்பூர் தெற்கு மாவட்ட இந்து முன்னேற்ற கழக அலுவலகத்தில் 5 அடி உயரமுள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.



ஒன்றிய பகுதியில் உள்ள தளவாய் பட்டினத்தில் இரண்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மொத்தம் மூன்று சிலைகளுக்கு கணபதி ஹோம பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வுகள் இந்து முன்னேற்றக் கழக நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றன.



திருப்பூர் தெற்கு மாவட்ட இந்து முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் என். கோமதி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், இந்து முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் கோபிநாத் முதலாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை ரவுண்டானா அருகே கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.



மாலை 4 மணியளவில், உடுமலை ரவுண்டானா அருகே மூன்று சிலைகளுக்கும் பூஜை செய்யப்பட்டது.



பின்னர், இந்த சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியை இந்து முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் ஜி.கார்த்திக் ஏற்பாடு செய்திருந்தார். மேலும், மாவட்ட இந்து முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...