தாராபுரத்தில் இந்து முன்னேற்றக் கழகத்தின் முதலாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து முன்னேற்றக் கழகத்தின் முதலாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விசர்ஜன ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. மூன்று விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர மற்றும் ஒன்றிய பகுதியில் இந்து முன்னேற்றக் கழகத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெற்றது.



இந்த விழாவின் ஒரு பகுதியாக, தாராபுரத்தில் உள்ள திருப்பூர் தெற்கு மாவட்ட இந்து முன்னேற்ற கழக அலுவலகத்தில் 5 அடி உயரமுள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.



ஒன்றிய பகுதியில் உள்ள தளவாய் பட்டினத்தில் இரண்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மொத்தம் மூன்று சிலைகளுக்கு கணபதி ஹோம பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வுகள் இந்து முன்னேற்றக் கழக நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றன.



திருப்பூர் தெற்கு மாவட்ட இந்து முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் என். கோமதி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், இந்து முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் கோபிநாத் முதலாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை ரவுண்டானா அருகே கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.



மாலை 4 மணியளவில், உடுமலை ரவுண்டானா அருகே மூன்று சிலைகளுக்கும் பூஜை செய்யப்பட்டது.



பின்னர், இந்த சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியை இந்து முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் ஜி.கார்த்திக் ஏற்பாடு செய்திருந்தார். மேலும், மாவட்ட இந்து முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...