வாட்ஸ்அப் குழு மூலம் வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கு: 117 ஏஜென்ட்கள் கண்டுபிடிப்பு

கோவையில் வெளிநாட்டு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய வழக்கில் வாட்ஸ்அப் குழு மூலம் செயல்பட்ட 117 ஏஜென்ட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் கைது செய்யப்பட்டு, 15 வெளிநாட்டு பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.



கோவை: கோவை மாநகரில் நட்சத்திர ஹோட்டல்களில் வெளிநாட்டு பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக வந்த புகார்களை அடுத்து, கோவை தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தி வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இரண்டு புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து வடக்கு காவல் துணை ஆணையர் ஸ்டாலின் கூறுகையில், "கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்தியா முழுவதும் வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தி 117 ஏஜென்ட்கள் மூலம் விபச்சார தொழில் செய்வது தெரியவந்தது. கோவையில் உள்ள முக்கியமான 8 நட்சத்திர ஹோட்டல்களில், நீண்ட நாட்கள் தங்கி இருந்தவர்கள் மற்றும் வந்து சென்றவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன," என்றார்.

மேலும் அவர், "ரஷ்யா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விபச்சாரத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வாட்ஸ்அப் குழு மூலம் விபச்சாரத் தொழில் செய்த நபர்களிடமிருந்து சிம் கார்டுகள், செல்போன்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன," என்று தெரிவித்தார்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கபீர் சிங் என்பவரை தேடி வருவதாகவும், இந்தியா முழுவதும் ஏஜென்ட்களாக செயல்பட்டு வரும் 117 நபர்களை பிடிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் துணை ஆணையர் ஸ்டாலின் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிக்கந்தர் பாதுஷா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...