நீர்த்தேக்கமாக காட்சியளிக்கும் உதகை பேருந்து நிலையம்- பொதுமக்கள் அவதி

தமிழத்தில் மிகவும் பிரசிதிபெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்று மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரான நீலகிரி, உதகை. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் உதகையின் எழில்கொஞ்சும் இயற்கை அழகைக்காக ஆண்டுதோறும் லட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்வர். 

மேலும், தற்போது தமிழகத்தின் சமவெளிப்பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளதாலும், கோடை விடுமுறை மற்றும் தற்போது மே தினத்தை முன்னிட்டு சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்களுக்கு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறைகள் விடப்பட்டுள்ளதாலும் பல்லாயிறக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு உட்பட்ட உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.



இந்நிலையில், பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட நிலகிரியின் உதகை பேருந்து நிலையத்தின் சாலை மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. குண்டும் குழியுமாக உள்ள இந்த பேருந்து நிலையத்தின் சாலை கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் நிரம்பி ஏதோ குளம், குட்டை போல் காட்சியளித்து வருகிறது. இதனால், பேருந்து பயணிகள் நடப்பதற்கு பாதையின்றி பேருந்தில் ஏற சிறமப்பட்டு வருகின்றனர்.



மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த சாலையினை சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...