நீர்த்தேக்கமாக காட்சியளிக்கும் உதகை பேருந்து நிலையம்- பொதுமக்கள் அவதி

தமிழத்தில் மிகவும் பிரசிதிபெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்று மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரான நீலகிரி, உதகை. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் உதகையின் எழில்கொஞ்சும் இயற்கை அழகைக்காக ஆண்டுதோறும் லட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்வர். 

மேலும், தற்போது தமிழகத்தின் சமவெளிப்பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளதாலும், கோடை விடுமுறை மற்றும் தற்போது மே தினத்தை முன்னிட்டு சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்களுக்கு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறைகள் விடப்பட்டுள்ளதாலும் பல்லாயிறக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு உட்பட்ட உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.



இந்நிலையில், பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட நிலகிரியின் உதகை பேருந்து நிலையத்தின் சாலை மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. குண்டும் குழியுமாக உள்ள இந்த பேருந்து நிலையத்தின் சாலை கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் நிரம்பி ஏதோ குளம், குட்டை போல் காட்சியளித்து வருகிறது. இதனால், பேருந்து பயணிகள் நடப்பதற்கு பாதையின்றி பேருந்தில் ஏற சிறமப்பட்டு வருகின்றனர்.



மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த சாலையினை சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...