உடுமலையில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' விநாயகர் சிலை: நடிகர் லாரன்ஸ் பாராட்டு

உடுமலையில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, மண்பாண்ட கலைஞர் ரஞ்சித் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' விநாயகர் சிலை உருவாக்கி, நடிகர் லாரன்ஸின் பாராட்டைப் பெற்றார். லாரன்ஸ் விரைவில் ரஞ்சித்தை நேரில் சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற மண்பாண்ட கலைஞர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் இடம்பெற்ற விநாயகர் சிலையை களிமண்ணால் உருவாக்கி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான ரஞ்சித், சில நாட்களுக்கு முன்னர் 'வேட்டையன்' படத்தில் இடம்பெற்ற விநாயகர் சிலையை உருவாக்கி கவனம் ஈர்த்தார். தற்போது, 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் இடம்பெற்ற விநாயகர் சிலையை மிகவும் அழகாக வடிவமைத்துள்ளார்.



இந்த சிலையின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தின் நாயகன் நடிகர் லாரன்ஸ் தனது X தளத்தில் இதனைப் பகிர்ந்து ரஞ்சித்தின் கலைத் திறமையைப் பாராட்டியுள்ளார். மேலும், மிக விரைவில் ரஞ்சித்தை நேரில் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



லாரன்ஸின் இந்த பாராட்டும் அறிவிப்பும் ரஞ்சித்துக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இவரது கலைப்படைப்புகள் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...