வால்பாறை பச்சைமலை எஸ்டேட்டில் நுழைந்த காட்டு யானை: குடியிருப்பு பகுதியில் பரபரப்பு

வால்பாறை பச்சைமலை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் காட்டு யானை நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியது. வனத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


Coimbatore: வால்பாறை பச்சைமலை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் காட்டு யானை ஒன்று நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியது. வால்பாறை எஸ்டேட்டுகளில் ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. இவை உணவு மற்றும் குடிநீர் தேடி அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வழக்கமாகி வருகிறது.

இந்நிலையில், செப்டம்பர் 6 அன்று காலையில் ஒரு ஒற்றைக்காட்டு யானை பச்சைமலை எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. இந்த யானை மாலை வரை அங்கிருந்த வாழை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்களை சேதப்படுத்தியது.



இதனால் அதிர்ச்சியடைந்த எஸ்டேட் தொழிலாளர்கள் யானையை விரட்ட முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. உடனே அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடினர். இறுதியில் அவர்கள் யானையை வனப்பகுதிக்குள் விரட்டி வெற்றி பெற்றனர்.

இந்த சம்பவம் குடியிருப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...