கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா மற்றும் புத்தாக்க பயிற்சி விழா நடைபெற்றது. தொழில்துறை நிபுணர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டினர்.


Coimbatore: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா மற்றும் புத்தாக்க பயிற்சி விழா கல்லூரி வளாகத்தில் இரண்டு நாட்கள் செப்டம்பர் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஏ.சௌந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்றார்.

எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கினார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் கல்வித்துறை இயக்குநர் என்.ஆர்.அலமேலு சிறப்புரை ஆற்றினார்.

முதல் நாள் விழாவில், கோவை அல்ஸ்டாம் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு குழு தலைவர் சாயா பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது உரையில், தொழில்நுட்ப மாற்றத்தை மாணவர்கள் வரவேற்கும் பொருட்டு கற்றுக்கொள்வதில் ஆர்வம் மிகுதி வைத்திருக்க வேண்டும் எனவும், இந்த தொழில்நுட்ப உலகில் மிகவும் முக்கியமான அடிப்படைகளை வலுப்படுத்துவது குறித்தும் வலியுறுத்தினார். மேலும், வளாகத்தில் கிடைக்கும் ஏராளமான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாணவர்களை கேட்டுக்கொண்டார்.

இரண்டாம் நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்காவின் டெக்சாஸ் மாநகரத்தின் எம்பெடெட் - குரு எல்.எல்.சி. நிறுவனத்தின் இயக்குனர் ஹரீஷ் ஜானகிராமன் கலந்து கொண்டார். அவர் தனது உரையில், மாணவர்கள் எப்போதும் நேர்காணலுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மகாபாரதத்தில் இருந்து அனுமானங்களை மேற்கோள் காட்டி, உடல், ஆன்மா மற்றும் மனதில் செயலில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். இறுதியாக, தற்போதைய போக்குகளைத் தெரிந்துகொள்ளும் வகையில் படிக்கும் பழக்கத்தை வளர்க்க மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

கௌரவ விருந்தினர்களாக, இக்கல்லூரியில் 1996-2000 கல்வி ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள், கோவை காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு குழு இயக்குனர் சக்திவேல் ராஜசேகர், பெங்களூரு இன்ஜினியரிங் ஆர்ம் எம்பெடட் டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் இயக்குநர் பழனியப்பன் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் மாணவர்கள் எவ்வாறு தங்களின் நான்கு வருட பட்டப்படிப்பை திறம்பட எதிர்கொள்ள வேண்டும் எனவும், பல்வேறு நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில், தற்போது பயின்று கொண்டிருக்கும், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மாணவ மாணவியருக்கு சிறப்பு விருந்தினர்கள் சான்றிதழும் பரிசும் வழங்கினர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...