கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா மற்றும் புத்தாக்க பயிற்சி விழா நடைபெற்றது. தொழில்துறை நிபுணர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டினர்.


Coimbatore: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா மற்றும் புத்தாக்க பயிற்சி விழா கல்லூரி வளாகத்தில் இரண்டு நாட்கள் செப்டம்பர் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஏ.சௌந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்றார்.

எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கினார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் கல்வித்துறை இயக்குநர் என்.ஆர்.அலமேலு சிறப்புரை ஆற்றினார்.

முதல் நாள் விழாவில், கோவை அல்ஸ்டாம் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு குழு தலைவர் சாயா பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது உரையில், தொழில்நுட்ப மாற்றத்தை மாணவர்கள் வரவேற்கும் பொருட்டு கற்றுக்கொள்வதில் ஆர்வம் மிகுதி வைத்திருக்க வேண்டும் எனவும், இந்த தொழில்நுட்ப உலகில் மிகவும் முக்கியமான அடிப்படைகளை வலுப்படுத்துவது குறித்தும் வலியுறுத்தினார். மேலும், வளாகத்தில் கிடைக்கும் ஏராளமான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாணவர்களை கேட்டுக்கொண்டார்.

இரண்டாம் நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்காவின் டெக்சாஸ் மாநகரத்தின் எம்பெடெட் - குரு எல்.எல்.சி. நிறுவனத்தின் இயக்குனர் ஹரீஷ் ஜானகிராமன் கலந்து கொண்டார். அவர் தனது உரையில், மாணவர்கள் எப்போதும் நேர்காணலுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மகாபாரதத்தில் இருந்து அனுமானங்களை மேற்கோள் காட்டி, உடல், ஆன்மா மற்றும் மனதில் செயலில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். இறுதியாக, தற்போதைய போக்குகளைத் தெரிந்துகொள்ளும் வகையில் படிக்கும் பழக்கத்தை வளர்க்க மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

கௌரவ விருந்தினர்களாக, இக்கல்லூரியில் 1996-2000 கல்வி ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள், கோவை காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு குழு இயக்குனர் சக்திவேல் ராஜசேகர், பெங்களூரு இன்ஜினியரிங் ஆர்ம் எம்பெடட் டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் இயக்குநர் பழனியப்பன் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் மாணவர்கள் எவ்வாறு தங்களின் நான்கு வருட பட்டப்படிப்பை திறம்பட எதிர்கொள்ள வேண்டும் எனவும், பல்வேறு நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில், தற்போது பயின்று கொண்டிருக்கும், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மாணவ மாணவியருக்கு சிறப்பு விருந்தினர்கள் சான்றிதழும் பரிசும் வழங்கினர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...