கோவை மாவட்டத்தில் 708 விநாயகர் சிலைகள்:பாதுகாப்பு பணியில் 3,500 காவலர்கள்..!

கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 708 விநாயகர் சிலைகள் நிறுவப்பட உள்ளன. 3,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேர கண்காணிப்பு ஏற்படுத்தப்படுகிறது.



Coimbatore: கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு இடங்களில் 708 விநாயகர் சிலைகள் நிறுவப்பட உள்ளன. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள 3,500 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கோவை மாநகரில் ஒதுக்கப்பட்ட இடங்களில் பல்வேறு இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை நிறுவ உள்ளனர். பொதுமக்களும் தங்கள் குடியிருப்பு வளாகங்களில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை நிறுவுவார்கள். சிலைகள் நிறுவப்படும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துமாறு அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 24 மணி நேரமும் தன்னார்வலர்களை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மாநகர பகுதிகளில் ஒரு சிலைக்கு ஒரு காவலர் வீதம் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார். நாளை சனிக்கிழமை காலை முதல் 2,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். சில இந்து அமைப்புகளும், பொதுமக்களும் சனிக்கிழமை மாலையே நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க முடிவு செய்துள்ளனர்.

இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், பா.ஜ.க, இந்து மக்கள் கட்சி (தமிழகம்), பாரத் சேனா மற்றும் பிற இந்து அமைப்புகள் செப்டம்பர் 9 ஆம் தேதி மாலை விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துகின்றன. 397 விநாயகர் சிலைகள் சிங்காநல்லூர், குறிச்சி குளம், குனியமுத்தூர், வெள்ளக்கிணறு மற்றும் முத்தண்ணங்குளம் ஆகிய இடங்களில் கரைக்கப்படும்.

இந்து முன்னணி, வி.எச்.பி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் செப்டம்பர் 11 அன்று மாலை விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்த உள்ளனர். முத்தண்ணங்குளத்தில் சுமார் 265 சிலைகள் கரைக்கப்படும். கோவை ஊரக காவல் எல்லையில், சனிக்கிழமை காலை 1,532 விநாயகர் சிலைகள் நிறுவப்பட உள்ளன.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 3,500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...