மேட்டுப்பாளையம் அருகே குரங்குகள் அட்டகாசம்: பூனை உயிரிழப்பு, நாய்கள் படுகாயம்

மேட்டுப்பாளையம் அருகே கூடுதுறை மலைப்பகுதியில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. ஒரு பூனை உயிரிழந்தது, இரண்டு நாய்கள் படுகாயமடைந்தன. மக்கள் பாதுகாப்பு கோரி வனத்துறையிடம் முறையிட்டுள்ளனர்.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சாரத்துக்குட்பட்ட சமயபுரம் அருகே உள்ள கூடுதுறை மலைப்பகுதியில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இப்பகுதியில் ஒரு பூனை குரங்கால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளது, மேலும் இரண்டு நாய்கள் படுகாயமடைந்துள்ளன.

கூடுதுறை மலைப்பகுதி பவானி ஆற்றின் அருகேயும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியும் அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியின் அமைப்பு காரணமாக குரங்கு உள்ளிட்ட வன உயிரினங்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.



சமீபத்தில், இப்பகுதியில் வசிக்கும் தங்கமணி என்பவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட பூனையை ஒரு குரங்கு தாக்கி, அதன் வயிற்றுப் பகுதியைக் கிழித்துள்ளது. இந்த தாக்குதலில் பூனை உயிரிழந்தது. அதே குரங்கு அருகில் இருந்த இரண்டு நாய்களையும் கழுத்துப் பகுதியில் கடுமையாகத் தாக்கியுள்ளது. இதனால் நாய்களுக்கு கழுத்தில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் அச்சமடைந்த பொதுமக்கள், குரங்குகள் குடியிருப்புகளுக்குள் நுழைந்து குழந்தைகளையும் தாக்க வாய்ப்பு உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். எனவே, வனத்துறை அதிகாரிகள் விரைவில் கூண்டு வைத்து சேட்டை செய்யும் குரங்குகளைப் பிடித்து, அடர் வனப் பகுதிக்குள் விட வேண்டும் என கூடுதுறை மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...