மடத்துக்குளம் அருகே கிரஷர்களால் பாதிப்பு: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில், மடத்துக்குளம் அருகே தூங்காவி பகுதியில் உள்ள கிரஷர்களால் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை உட்கோட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று உடுமலை அரசு கலைக் கல்லூரியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்தார்.



உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எடுத்துரைத்தனர். தென்னை மரங்களை தாக்கும் வாடல் நோயை கட்டுப்படுத்துவது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது, உடுமலை கால்நடை மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லாதது, நடமாடும் கால்நடை வாகனத்தில் மருந்துகள் இருப்பு இல்லாதது போன்ற பிரச்சினைகளை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

உடுமலை ஐஸ்வர்யா நகர் பகுதியில் நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பு, புதிய பஸ் நிலையத்தின் காம்பவுண்ட் சுவர் பாதையை அடைப்பது, சங்கர்நகர், எஸ்.வி.புரம், எஸ்.எஸ். காலனி பகுதிகளில் முகமூடி அணிந்த நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது, போதைப் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளையும் விவசாயிகள் எடுத்துரைத்தனர்.



உடுமலை பிஏபி கால்வாயின் கரையில் கழிவுகள் கொட்டப்படுவது, உடுமலை வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லாதது, வாகன நெருக்கடி, கமிஷன் முறை பிரச்சினைகள், உழவர் சந்தையில் வியாபாரிகள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது போன்ற பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டன.

குறிப்பாக, மடத்துக்குளம் அருகே தூங்காவி பகுதியில் உள்ள கிரஷர்களால் குடியிருப்பு வாசிகள் மற்றும் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மடத்துக்குளம் மைவாடி பகுதியில் அரசு ஊழியருக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மாட்டு கொட்டகை மற்றும் கிணறு அமைக்கப்பட்டது குறித்தும், உடுமலை மற்றும் மடத்துக்குளம் நில அளவைத் துறைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள், அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...