பரம்பிக்குளம் அணை நிரம்பியது: மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவை எட்டியதால், மூன்று மதகுகள் வழியாக வினாடிக்கு 3,600 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 4,600 கனஅடி நீர் வரத்து தொடர்கிறது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணை நேற்று (செப்டம்பர் 5) முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து, மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கமான இந்த அணை 72 அடி உயரமும், 17 டி.எம்.சி. மொத்த நீர்க் கொள்ளளவும் கொண்டது. நேற்று அணையின் நீர்மட்டம் 71.78 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 4,600 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில், அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வினாடிக்கு 3,600 கனஅடி நீர் மூன்று மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.

வெளியேற்றப்படும் உபரி நீர் பொரிங்கல் குத்து அணை மற்றும் சாலக்குடி அருவி வழியாக அரபிக்கடலில் கலக்கிறது. மேலும், 1,000 கனஅடி நீர் சுரங்கப்பாதை வழியாக காண்டூர் கால்வாய்க்கு செல்கிறது.

அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், பி.ஏ.பி. திட்ட கண்காணிப்பு பொறியாளர் கார்த்திக்கேயன், பரம்பிக்குளம் அணை செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர்கள் தியாகராஜன் மற்றும் சங்கீதா ஆகியோர் அணையின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கடந்த வாரம் புதுப்பிக்கப்பட்ட மதகுகள் வழியாக சோதனை ஓட்டமாக நீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றம் மேற்கொள்ளப்படுகிறது.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...