பரம்பிக்குளம் அணை நிரம்பியது: மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவை எட்டியதால், மூன்று மதகுகள் வழியாக வினாடிக்கு 3,600 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 4,600 கனஅடி நீர் வரத்து தொடர்கிறது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணை நேற்று (செப்டம்பர் 5) முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து, மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கமான இந்த அணை 72 அடி உயரமும், 17 டி.எம்.சி. மொத்த நீர்க் கொள்ளளவும் கொண்டது. நேற்று அணையின் நீர்மட்டம் 71.78 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 4,600 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில், அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வினாடிக்கு 3,600 கனஅடி நீர் மூன்று மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.

வெளியேற்றப்படும் உபரி நீர் பொரிங்கல் குத்து அணை மற்றும் சாலக்குடி அருவி வழியாக அரபிக்கடலில் கலக்கிறது. மேலும், 1,000 கனஅடி நீர் சுரங்கப்பாதை வழியாக காண்டூர் கால்வாய்க்கு செல்கிறது.

அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், பி.ஏ.பி. திட்ட கண்காணிப்பு பொறியாளர் கார்த்திக்கேயன், பரம்பிக்குளம் அணை செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர்கள் தியாகராஜன் மற்றும் சங்கீதா ஆகியோர் அணையின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கடந்த வாரம் புதுப்பிக்கப்பட்ட மதகுகள் வழியாக சோதனை ஓட்டமாக நீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றம் மேற்கொள்ளப்படுகிறது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...