கோவை வழியாக கோவா - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

கோவை மற்றும் திருப்பூர் வழியாக மட்கான்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பல முக்கிய நகரங்களில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவா அருகே உள்ள மட்கான் மற்றும் வேளாங்கண்ணி இடையே கோவை மற்றும் திருப்பூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில் சேவை குறித்த விவரங்களை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மட்கான் ரயில் நிலையத்திலிருந்து செப்டம்பர் 6 அன்று நண்பகல் 12.30 மணிக்கு புறப்படும் மட்கான்-வேளாங்கண்ணி ரயில் (எண்: 01007) மறுநாள் நண்பகல் 12.25 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

திரும்பும் வழியில், வேளாங்கண்ணியிலிருந்து செப்டம்பர் 7 அன்று இரவு 11.55 மணிக்கு புறப்படும் வேளாங்கண்ணி-மட்கான் சிறப்பு ரயில் (எண்: 01008) மறுநாள் இரவு 11 மணிக்கு மட்கான் நிலையத்தை வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஷொரணூர், திரூர், கோழிக்கோடு, தலச்சேரி, கண்ணூர், பையனூர், காசர்கோடு, மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயணிகள் இந்த சிறப்பு ரயில் சேவையை பயன்படுத்தி பயனடையலாம் என ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...