கோவை வழியாக கோவா - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

கோவை மற்றும் திருப்பூர் வழியாக மட்கான்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பல முக்கிய நகரங்களில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவா அருகே உள்ள மட்கான் மற்றும் வேளாங்கண்ணி இடையே கோவை மற்றும் திருப்பூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில் சேவை குறித்த விவரங்களை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மட்கான் ரயில் நிலையத்திலிருந்து செப்டம்பர் 6 அன்று நண்பகல் 12.30 மணிக்கு புறப்படும் மட்கான்-வேளாங்கண்ணி ரயில் (எண்: 01007) மறுநாள் நண்பகல் 12.25 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

திரும்பும் வழியில், வேளாங்கண்ணியிலிருந்து செப்டம்பர் 7 அன்று இரவு 11.55 மணிக்கு புறப்படும் வேளாங்கண்ணி-மட்கான் சிறப்பு ரயில் (எண்: 01008) மறுநாள் இரவு 11 மணிக்கு மட்கான் நிலையத்தை வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஷொரணூர், திரூர், கோழிக்கோடு, தலச்சேரி, கண்ணூர், பையனூர், காசர்கோடு, மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயணிகள் இந்த சிறப்பு ரயில் சேவையை பயன்படுத்தி பயனடையலாம் என ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...