கோவையில் வழக்கை வாபஸ் பெற கோரி பெண்ணுக்கு கொலை மிரட்டல்: மூவர் மீது புகார்

கோவை கவுண்டம்பாளையத்தில், பாலியல் வன்கொடுமை வழக்கை வாபஸ் பெற கோரி ஒரு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை கவுண்டம்பாளையம், சேரன் நகர் அருகே உள்ள முல்லை நகரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சமீபத்தில் இறந்தார். இவரது மனைவி கனக லட்சுமி (46) தனது இளைய மகள் மீது அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.

இது தொடர்பாக மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் முருகன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில், அந்த வழக்கை வாபஸ் பெறுமாறு கோரி முருகனின் மனைவி பானுப்பிரியா, அவரது தாயார் சின்னம்மாள், மற்றும் தங்கை பழனியம்மாள் ஆகியோர் கனக லட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து கனக லட்சுமி, கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் செப்டம்பர் 4 அன்று புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, பானுப்பிரியா, சின்னம்மாள், பழனியம்மாள் ஆகியோரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் உள்ளூர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...