கோவை கருமத்தம்பட்டி அருகே நிற்காமல் சென்ற பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்

கோவை காந்திபுரத்திலிருந்து திருப்பூர் செல்லும் தனியார் பேருந்து, கருமத்தம்பட்டியில் நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்தனர். போலீசார் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தனர்.


கோவை: கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வழியாக திருப்பூருக்கு ஏராளமான தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செப்டம்பர் 5 அன்று காந்திபுரத்திலிருந்து திருப்பூர் செல்லும் கே.எம்.எஸ் என்ற தனியார் பேருந்தில் கருமத்தம்பட்டி செல்வதற்காக சில பயணிகள் ஏறினர்.

பேருந்து புறப்பட்ட பின், நடத்துனர் கருமத்தம்பட்டியில் பேருந்து நிறுத்தப்படாது என்று கூறி, பயணிகளை திட்டி பாதி வழியிலேயே இறக்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட பயணிகள், இது குறித்து ஊர் பொதுமக்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

பேருந்து கருமத்தம்பட்டி அருகே வந்தபோது, ஊர் பொதுமக்கள் பேருந்தை சுற்றி வளைத்து சிறைபிடித்தனர்.



அவர்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இச்சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, பேருந்து சேவைகளை முறையாக நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Newsletter

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை உட்பட 10 மாவட்...

கோவை மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் 49 மனுக்கள் பெறப்பட்டது

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குடிநீர், சாலை, வரி, சுகாதாரம் உள்ள...

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...