கோவை கருமத்தம்பட்டி அருகே நிற்காமல் சென்ற பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்

கோவை காந்திபுரத்திலிருந்து திருப்பூர் செல்லும் தனியார் பேருந்து, கருமத்தம்பட்டியில் நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்தனர். போலீசார் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தனர்.


கோவை: கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வழியாக திருப்பூருக்கு ஏராளமான தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செப்டம்பர் 5 அன்று காந்திபுரத்திலிருந்து திருப்பூர் செல்லும் கே.எம்.எஸ் என்ற தனியார் பேருந்தில் கருமத்தம்பட்டி செல்வதற்காக சில பயணிகள் ஏறினர்.

பேருந்து புறப்பட்ட பின், நடத்துனர் கருமத்தம்பட்டியில் பேருந்து நிறுத்தப்படாது என்று கூறி, பயணிகளை திட்டி பாதி வழியிலேயே இறக்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட பயணிகள், இது குறித்து ஊர் பொதுமக்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

பேருந்து கருமத்தம்பட்டி அருகே வந்தபோது, ஊர் பொதுமக்கள் பேருந்தை சுற்றி வளைத்து சிறைபிடித்தனர்.



அவர்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இச்சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, பேருந்து சேவைகளை முறையாக நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...