கோவை கருமத்தம்பட்டி அருகே நிற்காமல் சென்ற பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்

கோவை காந்திபுரத்திலிருந்து திருப்பூர் செல்லும் தனியார் பேருந்து, கருமத்தம்பட்டியில் நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்தனர். போலீசார் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தனர்.


கோவை: கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வழியாக திருப்பூருக்கு ஏராளமான தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செப்டம்பர் 5 அன்று காந்திபுரத்திலிருந்து திருப்பூர் செல்லும் கே.எம்.எஸ் என்ற தனியார் பேருந்தில் கருமத்தம்பட்டி செல்வதற்காக சில பயணிகள் ஏறினர்.

பேருந்து புறப்பட்ட பின், நடத்துனர் கருமத்தம்பட்டியில் பேருந்து நிறுத்தப்படாது என்று கூறி, பயணிகளை திட்டி பாதி வழியிலேயே இறக்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட பயணிகள், இது குறித்து ஊர் பொதுமக்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

பேருந்து கருமத்தம்பட்டி அருகே வந்தபோது, ஊர் பொதுமக்கள் பேருந்தை சுற்றி வளைத்து சிறைபிடித்தனர்.



அவர்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இச்சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, பேருந்து சேவைகளை முறையாக நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Newsletter

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....