கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 44-வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 9 அன்று நடைபெறுகிறது

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 44-வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 9 அன்று நடைபெறுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் 9,526 மாணவர்கள் பட்டம் பெறுகிறார்கள்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 44வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 09, 2024 (திங்கட்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற உள்ளது.

இவ்விழாவிற்கு, தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆர்.என்.ரவி தலைமையேற்கிறார். நலத்துறை அமைச்சரும், தமிழ்நாடு வேளாண்மை-உழவர் இப்பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறநல்கை பரிசுகளையும், பதக்கங்களையும் அறிவிக்கவுள்ளார்.

முனைவர் திரிலோச்சன் மஹாபத்ரா, தலைவர், பயிர் இரகங்கள் மற்றும் உழவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், இந்திய அரசு, புதுதில்லி மற்றும் முன்னாள் தலைமை இயக்குநர், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம், புதுதில்லி அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றவுள்ளார்.

இப்பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 9,526 மாணவர்கள் இளமறிவியல், முதுநிலை பட்டமேற்படிப்பு மற்றும் முனைவர் பிரிவில் பட்டம் பெற உள்ளனர். இதில் 3,415 மாணவர்கள் நேரடியாகவும் (In person), உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இருந்து 6,111 மாணவர்கள் தபால் (In absentia) மூலமாகவும் பட்டங்களைப் பெற உள்ளார்கள்.

Newsletter

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...