கோவை மாநகராட்சி ஆணையர் மண்டல அளவிலான கபடி போட்டிக்கு தேர்வான மாணவிகளை வாழ்த்தினார்

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், மண்டல அளவிலான கபடி மற்றும் தடகள போட்டிகளுக்கு தேர்வான மூன்று மாணவிகளை வாழ்த்தினார். மாணவிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற ஊக்கமளித்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (05.09.2024), மண்டல அளவிலான கபடி மற்றும் தடகள போட்டிகளுக்கு தேர்வான மூன்று மாணவிகளை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் வாழ்த்தினார்.

மத்திய மண்டலம் அரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவி எஸ். இதழ்யஸ்ரீ, இளையோர் தடகளப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். அதேபோல், 10-ம் வகுப்பு மாணவிகளான எஸ். மோனிஷா மற்றும் ஐ.ஜாய்ஸ்மின் ஆகியோர் கபடிப் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இம்மூன்று மாணவிகளும் மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் பாராட்டினார். மேலும், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டுமென மாணவியர்களுக்கு ஆணையாளர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் வித்யா இராமநாதன் மற்றும் மாநகர கல்வி அலுவலர் குணசேகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...