கோவை மாநகராட்சி ஆணையர் மண்டல அளவிலான கபடி போட்டிக்கு தேர்வான மாணவிகளை வாழ்த்தினார்

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், மண்டல அளவிலான கபடி மற்றும் தடகள போட்டிகளுக்கு தேர்வான மூன்று மாணவிகளை வாழ்த்தினார். மாணவிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற ஊக்கமளித்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (05.09.2024), மண்டல அளவிலான கபடி மற்றும் தடகள போட்டிகளுக்கு தேர்வான மூன்று மாணவிகளை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் வாழ்த்தினார்.

மத்திய மண்டலம் அரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவி எஸ். இதழ்யஸ்ரீ, இளையோர் தடகளப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். அதேபோல், 10-ம் வகுப்பு மாணவிகளான எஸ். மோனிஷா மற்றும் ஐ.ஜாய்ஸ்மின் ஆகியோர் கபடிப் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இம்மூன்று மாணவிகளும் மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் பாராட்டினார். மேலும், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டுமென மாணவியர்களுக்கு ஆணையாளர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் வித்யா இராமநாதன் மற்றும் மாநகர கல்வி அலுவலர் குணசேகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...