கோவை டாக்டர் என்.ஜி.பி. கல்லூரியில் 'போலீஸ் அக்கா' திட்டம் தொடக்கம்

கோவை டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் 'போலீஸ் அக்கா' திட்டம் செப்டம்பர் 4 அன்று தொடங்கப்பட்டது. மாணவிகளின் பாதுகாப்பிற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் 'போலீஸ் அக்கா' திட்டத்தை கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் செப்டம்பர் 4 அன்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர் என்.ஜி.பி. கல்விக் குழுமங்களின் இயக்குநர் பெ.இரா.முத்துசாமி வரவேற்புரை ஆற்றினார். டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி தலைமை வகித்தார்.

'போலீஸ் அக்கா' திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மாநகரக் காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், "கல்லூரி மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை பெற்றோரிடமோ, தோழிகளிடமோ கூட பகிர்ந்து கொள்வதில்லை. இதனால் சில சமயங்களில் அவர்கள் விபரீதமான முடிவுகளுக்கு தள்ளப்படுகிறார்கள். சமூக வலைதளங்களை எப்படி பாதுகாப்புடன் பயன்படுத்துவது என்பதை மாணவிகள் அறிந்து கொள்ள வேண்டும். மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் சிறிய பிரச்னைகளை கூட போலீஸ் அக்காவிடம் தெரிவித்தால் அவற்றுக்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதற்கு ஆலோசனை வழங்குவார்" என்று தெரிவித்தார்.

கோவை மாநகர துணை காவல் ஆணையர் வி.சுஹாசினி பேசுகையில், "சமூகத்தில் தற்போது ஆண், பெண் பாகுபாடின்றி பழக வேண்டிய சமத்துவமான சூழல் நிகழ்கிறது. அச்சூழலில் பெண்கள் தங்களுக்கென ஒரு எல்லைக் கோட்டை வரைந்து அதற்குள் பழக வேண்டும். அந்த எல்லைக் கோட்டை மீறும்போது பிரச்னைகள் ஏற்படுகின்றன" என்று குறிப்பிட்டார்.

இந்த திட்டம் மூலம் மாணவிகள் தங்களின் பிரச்னைகளை பகிர்ந்து கொள்ளவும், அவற்றிற்கான தீர்வுகளை பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களின் பாதுகாப்பான பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...