கோவையில் வக்கீல் மகளைக் கடத்த முயன்ற இருவர் கைது

கோவை ரயில் நிலைய சாலையில் உள்ள ஓட்டலில் வக்கீல் குடும்பத்தினர் உணவருந்திக் கொண்டிருந்தபோது, இரு நபர்கள் வக்கீலின் மகளைக் கடத்த முயன்றனர். பொதுமக்கள் உதவியுடன் சம்பவ இடத்திலேயே இருவரும் பிடிபட்டனர்.


Coimbatore: கோவை அருகே உள்ள இருகூர் பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த வக்கீல் பிரவீன் குமார் (41), அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கோவை ரயில் நிலைய சாலையில் உள்ள ஓட்டலில் உணவருந்தச் சென்றனர். உணவருந்திய பின், பிரவீன் குமார் ஓட்டலுக்கு வெளியே ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது மனைவியும் மகளும் கழிவறைக்குச் சென்றனர்.

அப்போது, அங்கு வந்த இரு நபர்கள் பிரவீன் குமாரின் மகளைக் கடத்த முயன்றனர். இதைக் கண்ட அவரது மனைவி உடனடியாக சத்தமிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த பிரவீன் குமார், பொதுமக்களின் உதவியுடன் அந்த இருவரையும் பிடித்து கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

காவல் ஆய்வாளர் அர்ஜுன் குமார் தலைமையிலான காவல்துறையினர் அந்த இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் கோவை புதூர் குளத்துப்பாளையம் அம்மாவாசை கவுண்டர் வீதியைச் சேர்ந்த மணிவண்ணன் (30) மற்றும் பத்மநாபன் (30) என்பது தெரியவந்தது.

தற்போது இவர்களிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...