கோவையில் வக்கீல் மகளைக் கடத்த முயன்ற இருவர் கைது

கோவை ரயில் நிலைய சாலையில் உள்ள ஓட்டலில் வக்கீல் குடும்பத்தினர் உணவருந்திக் கொண்டிருந்தபோது, இரு நபர்கள் வக்கீலின் மகளைக் கடத்த முயன்றனர். பொதுமக்கள் உதவியுடன் சம்பவ இடத்திலேயே இருவரும் பிடிபட்டனர்.


Coimbatore: கோவை அருகே உள்ள இருகூர் பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த வக்கீல் பிரவீன் குமார் (41), அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கோவை ரயில் நிலைய சாலையில் உள்ள ஓட்டலில் உணவருந்தச் சென்றனர். உணவருந்திய பின், பிரவீன் குமார் ஓட்டலுக்கு வெளியே ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது மனைவியும் மகளும் கழிவறைக்குச் சென்றனர்.

அப்போது, அங்கு வந்த இரு நபர்கள் பிரவீன் குமாரின் மகளைக் கடத்த முயன்றனர். இதைக் கண்ட அவரது மனைவி உடனடியாக சத்தமிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த பிரவீன் குமார், பொதுமக்களின் உதவியுடன் அந்த இருவரையும் பிடித்து கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

காவல் ஆய்வாளர் அர்ஜுன் குமார் தலைமையிலான காவல்துறையினர் அந்த இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் கோவை புதூர் குளத்துப்பாளையம் அம்மாவாசை கவுண்டர் வீதியைச் சேர்ந்த மணிவண்ணன் (30) மற்றும் பத்மநாபன் (30) என்பது தெரியவந்தது.

தற்போது இவர்களிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...