தொண்டாமுத்தூரில் சின்ன வெங்காய விளைச்சல் அதிகம்; போதிய விலையின்மையால் விவசாயிகள் கவலை

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் சின்ன வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால், போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விலை உயரும் வரை பட்டறையில் சேமித்து வைக்க முடிவு செய்துள்ளனர்.



Coimbatore: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சின்ன வெங்காயம் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. ஆனால், போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

தொண்டாமுத்தூர் பகுதியில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. செம்மண் நிலத்தில் ஏக்கருக்கு 5 டன்னும், களிமண் நிலத்தில் 3 டன்னும் விளைச்சல் கிடைத்துள்ளது. ஆனால், தற்போது கிலோ ரூ.7 முதல் ரூ.10 வரை மட்டுமே விலை கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.



இந்த நிலையில், விலை உயரும் வரை பட்டறையில் வெங்காயத்தை சேமித்து வைக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால், பட்டறையில் சேமிக்கும்போது காலநிலை மாற்றம், அதிக மழை, காற்றோட்டமின்மை போன்ற காரணங்களால் வெங்காயம் கெட்டுப்போகும் அபாயம் உள்ளது.

இதனைத் தடுக்க, பட்டறையில் வெங்காயத்தை பாதுகாப்பாக சேமிக்கும் முறைகள் குறித்து வேளாண்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சின்ன வெங்காயத்திற்கு கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.80 வரை நிலையான விலை நிர்ணயிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விதை, உரம், மருந்து, பாசனம், கூலி என அனைத்து செலவுகளும் அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய குறைந்த விலை விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, சின்ன வெங்காயத்திற்கு நியாயமான விலை நிர்ணயிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...