7 நாள் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை: திருச்சியிலிருந்து கோவைக்கு விரைந்த ஆம்புலன்ஸ்

திருச்சியில் பிறந்த 7 நாள் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக, காவல்துறை பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் 2.5 மணி நேரத்தில் கோவை வந்தடைந்தது. குழந்தையின் உயிரைக் காக்க மருத்துவர்கள் தயாராக உள்ளனர்.



Coimbatore: திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 7 நாட்களே ஆன குழந்தைக்கு பிறவியிலேயே இருதய குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த குழந்தைக்கு அவசர இருதய அறுவை சிகிச்சை தேவைப்பட்டதால், கோவை ராமகிருஷ்ணா தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் திருச்சியில் இருந்து கிளம்பிய ஆம்புலன்ஸ், காவல்துறையின் உதவியுடன் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் வேகமாக கோவையை நோக்கி பயணித்தது. ஆம்புலன்ஸ் தடையின்றி செல்வதற்காக சாலை முழுவதும் கிரீன் காரிடார் ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இரண்டரை மணி நேரத்தில் குழந்தை பாதுகாப்பாக ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அஸ்வின் கூறுகையில், "வேகத்தடை மற்றும் பள்ளமான இடங்களில் எச்சரிக்கையாக செல்லும்படி ஆம்புலன்சில் இருந்த மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர். போக்குவரத்து இடையூறு இல்லாமல் காவல்துறையினர் மிகவும் உதவிகரமாக இருந்தனர். உரிய நேரத்தில் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தை குணமடைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்," என்றார்.

மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், "குழந்தையை பரிசோதித்து பிரச்சனையை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்க இருக்கிறோம். பிறந்து ஏழே நாளான குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வது மிகவும் சவாலான காரியம். ஏற்கனவே, பிறந்து ஐந்தே நாளான குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து தற்போது அந்த குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது. சிறப்பான மருத்துவ நிபுணர் குழு இருப்பதால், விரைவாக குழந்தை வந்தடைந்ததால் சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும் என்று நம்புகிறோம்," என்று தெரிவித்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...