மேட்டுப்பாளையத்தில் புதிய பசுமைப் பூங்கா மற்றும் பள்ளி வசதிகள் திறப்பு

நீலகிரி எம்பி ஆ.ராசா மேட்டுப்பாளையத்தில் ரூ.38 லட்சம் மதிப்பிலான பசுமைப் பூங்கா மற்றும் ரூ.53 லட்சம் மதிப்பிலான பள்ளி வசதிகளை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண்-30 சாந்தி நகர் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 38 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பசுமைப் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீலகிரி எம்பி ஆ.ராசா இன்று செப்.4 திறந்து வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.ஆ.இரவி, மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வின், துணைத் தலைவர் அருள்வடிவு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆர். சண்முகசுந்தரம், அ.அசரப் அலி, டி.பி.சுப்பிரமணியம், காரமடை ஒன்றிய கழக செயலாளர்கள் கல்யாணசுந்தரம், சுரேந்திரன், மேட்டுப்பாளையம் நகர கழக செயலாளர் முனுசாமி, முகமது யூனுஸ், மேட்டுப்பாளையம் நகர மன்ற உறுப்பினர்கள் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலர்கள், திமுக கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.



மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 29 மணி நகர் உயர்நிலைப் பள்ளியில் ரூபாய் 53 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அறிவியல் ஆய்வகம், புதிய கழிப்பறை, புதிய சுற்றுச் சுவர் ஆகியவற்றை பள்ளி மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்கு நீலகிரி எம்பி ஆ.ராசா இன்று (செப்.4) திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியிலும் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.ஆ.இரவி, மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வின், துணைத் தலைவர் அருள்வடிவு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆர்.சண்முகசுந்தரம், அ.அசரப் அலி, டி.பி.சுப்பிரமணியம், காரமடை ஒன்றிய கழக செயலாளர்கள் கல்யாணசுந்தரம், சுரேந்திரன், மேட்டுப்பாளையம் நகர கழக செயலாளர் முனுசாமி, முகமது யூனுஸ், மேட்டுப்பாளையம் நகர மன்ற உறுப்பினர்கள் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலர்கள், திமுக கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...