இறுதிச்சடங்கு கோலத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெண்கள்

கோவை தடாகம் சாலை வெங்கடாபுரம் பகுதியில் பட்டா வழங்கப்பட்ட பெண்கள், வீடு கட்ட முயற்சிக்கும்போது எதிர்ப்பு மற்றும் மிரட்டல்களை எதிர்கொண்டதாக கூறி, இறுதிச்சடங்கு கோலத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நண்பகல் சுமார் 12 மணியளவில் வித்தியாசமான காட்சி ஒன்று அரங்கேறியது. இறுதிச்சடங்கு கோலத்தில் சில பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

கோவை தடாகம் சாலை வெங்கடாபுரம் பகுதியில் உள்ள தெலுங்குபாளையத்தில் சுமார் 100 பேருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 2000ம் ஆண்டில் பட்டா ரத்து செய்யப்பட்ட சில நபர்கள் அங்கேயே தொடர்ந்து வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



புதிதாக பட்டா பெற்றவர்கள் அங்கு வீடு கட்டி குடியேற முயற்சிக்கும் போது, ஏற்கனவே அங்கு வசிப்பவர்கள் இடையூறு விளைவிப்பதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம்சாட்டினர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பெண்கள் சிலர் இறுதிச்சடங்கில் அணியும் வெள்ளை ஆடையில், தலைக்கு மேல் துணியை பிடித்தவாறு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும், இந்த பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால், காவல்துறையில் புகார் அளிக்குமாறு கூறுவதாகவும், காவல்துறையில் புகார் அளிக்க சென்றால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடமே கூறுமாறு திருப்பி அனுப்புவதாகவும் பெண்கள் குற்றம் சாட்டினர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...