இறுதிச்சடங்கு கோலத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெண்கள்

கோவை தடாகம் சாலை வெங்கடாபுரம் பகுதியில் பட்டா வழங்கப்பட்ட பெண்கள், வீடு கட்ட முயற்சிக்கும்போது எதிர்ப்பு மற்றும் மிரட்டல்களை எதிர்கொண்டதாக கூறி, இறுதிச்சடங்கு கோலத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நண்பகல் சுமார் 12 மணியளவில் வித்தியாசமான காட்சி ஒன்று அரங்கேறியது. இறுதிச்சடங்கு கோலத்தில் சில பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

கோவை தடாகம் சாலை வெங்கடாபுரம் பகுதியில் உள்ள தெலுங்குபாளையத்தில் சுமார் 100 பேருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 2000ம் ஆண்டில் பட்டா ரத்து செய்யப்பட்ட சில நபர்கள் அங்கேயே தொடர்ந்து வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



புதிதாக பட்டா பெற்றவர்கள் அங்கு வீடு கட்டி குடியேற முயற்சிக்கும் போது, ஏற்கனவே அங்கு வசிப்பவர்கள் இடையூறு விளைவிப்பதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம்சாட்டினர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பெண்கள் சிலர் இறுதிச்சடங்கில் அணியும் வெள்ளை ஆடையில், தலைக்கு மேல் துணியை பிடித்தவாறு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும், இந்த பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால், காவல்துறையில் புகார் அளிக்குமாறு கூறுவதாகவும், காவல்துறையில் புகார் அளிக்க சென்றால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடமே கூறுமாறு திருப்பி அனுப்புவதாகவும் பெண்கள் குற்றம் சாட்டினர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...