விநாயகர் சதுர்த்தி: மேட்டுப்பாளையத்தில் மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் ஆய்வு

மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் ஆய்வு செய்தார். பொதுக்கூட்டம், சிலை கரைப்பு, ஊர்வலப் பாதைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.


கோவை: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் ஐபிஎஸ் இன்று (செப்டம்பர் 3) மேட்டுப்பாளையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, இந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை அவர் பார்வையிட்டார். மேலும், விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ள பவானி ஆற்றுப் பகுதியையும், ஊர்வலம் செல்லும் பாதைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது டிஎஸ்பி பாலாஜி, இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். அவர்களிடம் ஐஜி செந்தில் குமார், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், முன்னேற்பாடு பணிகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது எந்தவித சம்பவங்களும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் காவல்துறை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ஐஜி செந்தில் குமார் உத்தரவிட்டார். மேலும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அவர் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...