கோவை அரசு பேருந்தில் பயணிகள் அமரும் இடத்தில் விரிசல்: அதிகாரிகள் பணிநீக்கம்

கோவையில் அரசு பேருந்தில் பயணிகள் அமரும் இடத்தில் விரிசல் ஏற்பட்டு சக்கரம் தெரிந்ததால் பரபரப்பு. வீடியோ வைரலானதை அடுத்து இரண்டு அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் முதல் குரும்பபாளையம் வரை இயக்கப்படும் 110 எண் கொண்ட அரசு பேருந்தில் பயணிகள் அமரும் இடத்தில் பலகை விரிசல் ஏற்பட்டு சக்கரம் தெரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்பவர் இந்த பேருந்தில் பயணித்துள்ளார். அவர் பேருந்தில் ஏறி சக்கரத்தின் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்தபோது, பலகையில் விரிசல் ஏற்பட்டு பேருந்தின் சக்கரங்கள் தெரிந்துள்ளன. இது குறித்து நடத்துனரிடம் கேள்வி எழுப்பியபோது, முறையான பதில் கிடைக்காததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.



இந்த சம்பவத்தை விஷ்ணு வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். வீடியோ வைரலான நிலையில், கோவை கோட்ட பொதுமேலாளர் உத்தரவின் பேரில் ஒண்டிப்புதூர் கிளை மேலாளர் மணிவண்ணன் மற்றும் உதவி பொறியாளர் சீனிவாசன் ஆகிய இருவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பேருந்துகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. பொதுப் போக்குவரத்து துறை அதிகாரிகள் பேருந்துகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...