கோவை அரசு பேருந்தில் பயணிகள் அமரும் இடத்தில் விரிசல்: அதிகாரிகள் பணிநீக்கம்

கோவையில் அரசு பேருந்தில் பயணிகள் அமரும் இடத்தில் விரிசல் ஏற்பட்டு சக்கரம் தெரிந்ததால் பரபரப்பு. வீடியோ வைரலானதை அடுத்து இரண்டு அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் முதல் குரும்பபாளையம் வரை இயக்கப்படும் 110 எண் கொண்ட அரசு பேருந்தில் பயணிகள் அமரும் இடத்தில் பலகை விரிசல் ஏற்பட்டு சக்கரம் தெரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்பவர் இந்த பேருந்தில் பயணித்துள்ளார். அவர் பேருந்தில் ஏறி சக்கரத்தின் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்தபோது, பலகையில் விரிசல் ஏற்பட்டு பேருந்தின் சக்கரங்கள் தெரிந்துள்ளன. இது குறித்து நடத்துனரிடம் கேள்வி எழுப்பியபோது, முறையான பதில் கிடைக்காததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.



இந்த சம்பவத்தை விஷ்ணு வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். வீடியோ வைரலான நிலையில், கோவை கோட்ட பொதுமேலாளர் உத்தரவின் பேரில் ஒண்டிப்புதூர் கிளை மேலாளர் மணிவண்ணன் மற்றும் உதவி பொறியாளர் சீனிவாசன் ஆகிய இருவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பேருந்துகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. பொதுப் போக்குவரத்து துறை அதிகாரிகள் பேருந்துகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...