மதுக்கரையில் இன்ஜினியரிங் நிறுவனத்தில் கொள்ளை: இரண்டு பேர் கைது

மதுக்கரையில் உள்ள இன்ஜினியரிங் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த அசீம் மணிகுண்ணன் (35) என்பவர் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் இன்ஜினியரிங் நிறுவனம் நடத்தி வருகிறார். செப்டம்பர் 2 ஆம் தேதி, நிறுவனத்தின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அசீம் மணிகுண்ணன், சூப்பர்வைசர் மகேந்திரன், மற்றும் மசூத் ஆகியோர் உள்ளே சென்று பார்த்தபோது, வெல்டிங் இயந்திரம், கிரைண்டிங் இயந்திரம் உள்ளிட்ட சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து அசீம் மணிகுண்ணன் சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். நிறுவனத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளையில் ஈடுபட்டவர்கள் குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த டிரைவர் நாகூர்தீன் (30) மற்றும் சுந்தராபுரம் காமராஜ் நகரைச் சேர்ந்த ஈஸ்வரன் (56) என்பது தெரியவந்தது.

இந்த தகவலின் அடிப்படையில், போலீசார் நாகூர்தீன் மற்றும் ஈஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை உட்பட 10 மாவட்...