மதுக்கரையில் இன்ஜினியரிங் நிறுவனத்தில் கொள்ளை: இரண்டு பேர் கைது

மதுக்கரையில் உள்ள இன்ஜினியரிங் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த அசீம் மணிகுண்ணன் (35) என்பவர் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் இன்ஜினியரிங் நிறுவனம் நடத்தி வருகிறார். செப்டம்பர் 2 ஆம் தேதி, நிறுவனத்தின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அசீம் மணிகுண்ணன், சூப்பர்வைசர் மகேந்திரன், மற்றும் மசூத் ஆகியோர் உள்ளே சென்று பார்த்தபோது, வெல்டிங் இயந்திரம், கிரைண்டிங் இயந்திரம் உள்ளிட்ட சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து அசீம் மணிகுண்ணன் சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். நிறுவனத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளையில் ஈடுபட்டவர்கள் குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த டிரைவர் நாகூர்தீன் (30) மற்றும் சுந்தராபுரம் காமராஜ் நகரைச் சேர்ந்த ஈஸ்வரன் (56) என்பது தெரியவந்தது.

இந்த தகவலின் அடிப்படையில், போலீசார் நாகூர்தீன் மற்றும் ஈஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...