மதுக்கரையில் இன்ஜினியரிங் நிறுவனத்தில் கொள்ளை: இரண்டு பேர் கைது

மதுக்கரையில் உள்ள இன்ஜினியரிங் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த அசீம் மணிகுண்ணன் (35) என்பவர் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் இன்ஜினியரிங் நிறுவனம் நடத்தி வருகிறார். செப்டம்பர் 2 ஆம் தேதி, நிறுவனத்தின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அசீம் மணிகுண்ணன், சூப்பர்வைசர் மகேந்திரன், மற்றும் மசூத் ஆகியோர் உள்ளே சென்று பார்த்தபோது, வெல்டிங் இயந்திரம், கிரைண்டிங் இயந்திரம் உள்ளிட்ட சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து அசீம் மணிகுண்ணன் சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். நிறுவனத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளையில் ஈடுபட்டவர்கள் குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த டிரைவர் நாகூர்தீன் (30) மற்றும் சுந்தராபுரம் காமராஜ் நகரைச் சேர்ந்த ஈஸ்வரன் (56) என்பது தெரியவந்தது.

இந்த தகவலின் அடிப்படையில், போலீசார் நாகூர்தீன் மற்றும் ஈஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...