கோவையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 25 வழக்குகள் பதிவு; இரண்டு ஆம்னி பஸ் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை

கோவையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டு ஆம்னி பஸ் ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட முயன்றதாக கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகர காவல் துறை செப்டம்பர் 2 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

கோவை மாநகரிலிருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம் போன்ற மாநில தலைநகரங்களுக்கும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் செல்லும் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என்பதை கண்டறிய சோதனை நடத்தப்பட்டது.

செப்டம்பர் 1, 2024 அன்று மாலை முதல் நடத்தப்பட்ட இந்த சோதனையில், கோவையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் 95 ஆம்னி பேருந்துகளின் ஓட்டுநர்கள் சோதனை செய்யப்பட்டனர். இதில் இரண்டு பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு ஆம்னி பேருந்தை இயக்க முயன்றது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த பேருந்துகளின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாற்று ஓட்டுநர்களை ஏற்பாடு செய்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்தவில்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகே பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதே நாள் இரவு, கோவை மாநகர போக்குவரத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களைக் கொண்டு 17 குழுக்கள் அமைக்கப்பட்டு, கோவை மாநகரில் சிறப்பு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில், 5 உயர்தர கார்கள், 4 உயர்தர இருசக்கர வாகனங்கள் உட்பட குடிபோதையில் வாகனங்களை இயக்கிய குற்றத்திற்காக மொத்தம் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...