கோவையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 25 வழக்குகள் பதிவு; இரண்டு ஆம்னி பஸ் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை

கோவையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டு ஆம்னி பஸ் ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட முயன்றதாக கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகர காவல் துறை செப்டம்பர் 2 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

கோவை மாநகரிலிருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம் போன்ற மாநில தலைநகரங்களுக்கும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் செல்லும் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என்பதை கண்டறிய சோதனை நடத்தப்பட்டது.

செப்டம்பர் 1, 2024 அன்று மாலை முதல் நடத்தப்பட்ட இந்த சோதனையில், கோவையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் 95 ஆம்னி பேருந்துகளின் ஓட்டுநர்கள் சோதனை செய்யப்பட்டனர். இதில் இரண்டு பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு ஆம்னி பேருந்தை இயக்க முயன்றது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த பேருந்துகளின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாற்று ஓட்டுநர்களை ஏற்பாடு செய்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்தவில்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகே பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதே நாள் இரவு, கோவை மாநகர போக்குவரத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களைக் கொண்டு 17 குழுக்கள் அமைக்கப்பட்டு, கோவை மாநகரில் சிறப்பு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில், 5 உயர்தர கார்கள், 4 உயர்தர இருசக்கர வாகனங்கள் உட்பட குடிபோதையில் வாகனங்களை இயக்கிய குற்றத்திற்காக மொத்தம் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...