கோவை கொடிசியாவில் 2 நாள் டென்டல் லேப் எக்ஸ்போ மற்றும் கருத்தரங்கம்


ஐவரி கண்காட்சி மற்றும் கைடன்ட் நிறுவனம் சார்பில் இந்தியாவில் முதல் முறையாக டென்டல் லேப் எக்ஸ்போ மற்றும் கருத்தரங்கம் கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் வரும் ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

முதல் முறையாக பல் சிகிச்சை துறையில் உலகமெங்கும் உள்ள மருத்துவர்களும், வல்லுநர்களும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்று தங்களின் அனுபவங்களையும், அறிவையும் பகிந்துகொள்ள உள்ளனர். இத்தகைய கருத்தங்கம் மற்றும் கண்காட்சி பல் மருத்துவர்கள் மற்றும் அந்தத் துறை சார்ந்துள்ள தொழில்நுட்ப வல்லநர் தங்களின் அறிவை விஸ்தரித்துக் கொள்ள உதவியாக இருக்கும். மேலும், பல் சிகிச்சை சார்ந்த துறை மேம்பாட்டுக்கும் இந்தக் கருத்தரங்கம் உறுதுணையாகும் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.



இந்தக் கருத்தரங்கில் பல் சிகிச்சை துறை சார்ந்த 60-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் உரையாற்ற உள்ளனர். மேலும், கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இந்த அரங்குகளில் பல் சிகிச்சையில் புதிதாக வந்துள்ள நவீன தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளும், சிகிச்சை முறைகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இந்தக் கண்காட்சி ஒருங்கிணைப்புக் குழுவில் நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் இடம்பெறவுள்ளனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா டென்டல் கல்லூரி துணை முதல்வர் வி.ஆர்.திருமூர்த்தியும், மும்பையில் பிரபல பல் மருத்துவராக உள்ள சந்தோஷ் மயக்கர் ஆகியோர் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சிக்கு தலைமை வகிக்க உள்ளனர்.

டேன்டல் கல்லுரி மதுரா டீனும், கைடன்ட் இதழ் ஆசிரியருமான மருத்துவர் மனீஷ் ரஹோரி கண்காட்சி ஒருங்கிணைப்பு செயலாளராக உள்ளார். ஹைதராபாத் பிரபல மருத்துவராக உள்ள மகேந்திரநாத் ரெட்டி கண்காட்சி அறிவியல் கமிட்டி தலைவராக உள்ளார். பெங்களூர் கான்பிடென்ட் ஆய்வகத்தின் இயக்குநர் கமிட்டியின் துணைத் தலைவராக உள்ளார். கருத்தரங்கின் புரவலர்களாக முன்னாள் ராணுவ வீரர் அன்வரீன் கானி, ஆர்விஎஸ் டென்டல் கல்லூரி முன்னாள் முதல்வர் மருத்துவர் பி.ராஜ்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி அறங்காவலர் ஆர்.விஜயகுமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

தமிழ்நாடு மாநில பல் சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம், கர்நாடக மாநில பல் சிகிச்சை ஆய்வகங்களின் சங்கம், மகாராஷ்டிரா டென்டல் மெக்கானிக்ஸ் சங்கம், குஜராத் பல் சிகிச்சை ஆய்வகங்களின் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள், கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியில் பங்கேற்கின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கி வைக்கவுள்ளார். இந்திய டென்டல் கவுன்சில் செயற்குழு உறுப்பினராக உள்ள மருத்துவர் சுரேஷ் குமார் கதரியா சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...