கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் ஜோதிபுரத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. கோவை எம்பி கணபதி ராஜ்குமார் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ஜோதிபுரத்தில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பணிகள் இன்று (செப்டம்பர் 2) தொடங்கின. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் வெ. விஸ்வ பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை எம்பி கணபதி ராஜ்குமார், பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், வார்டு கவுன்சிலர்களான சாந்தாமணி, வளர்மதி, கமலவேணி, பாலகிருஷ்ணன், தேவகி, அம்பிகா மற்றும் பொதுமக்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...