உடுமலை மளிகைக் கடையில் நூதன முறையில் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வைரல்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மளிகைக் கடையில் இருவர் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்டனர். சுமார் 8,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டன. சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலானது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சத்திரம் வீதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் நூதன முறையில் திருட்டு நடந்துள்ளது. இந்த சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சம்பவம் நடந்த நேரத்தில், கடை உரிமையாளர் புதிதாக வந்த சரக்குகளை சரிபார்க்க வெளியே இறக்கி வைத்திருந்தார். கடையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், உரிமையாளரும் பணியாளரும் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி இரண்டு நபர்கள் திருட்டில் ஈடுபட்டனர்.



முதலில் ஒருவர் அருகிலுள்ள பேன்சி கடைக்குச் சென்றார். பின்னர் செல்போனில் பேசுவது போல் நடித்து மளிகைக் கடைக்கு வந்து, அங்கிருந்த பெட்டியை எடுத்து பேன்சி கடைக்கு முன் வைத்தார். பின்னர் மற்றொருவரை அழைத்தார். அவர் வந்ததும், முதல் நபர் பேன்சி கடைக்குள் சென்று கடைக்காரருடன் பேச்சுக் கொடுத்தார். இதையடுத்து இரண்டாவது நபர் பலசரக்கு பெட்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

திருடப்பட்ட பெட்டியில் சுமார் 8,000 ரூபாய் மதிப்புள்ள சூடம் மற்றும் பெருங்காய டப்பாக்கள் இருந்ததாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களாக உடுமலை பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால், இது குறித்து உடுமலை காவல்துறையினர் விசாரணை செய்து, திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...