யார் அரசியலுக்கு வந்தாலும் கவலையில்லை, மக்கள் எங்கள் பக்கம் - அமைச்சர் மு.பெ. சாமிநாதன்

பொள்ளாச்சி அருகே நடைபெற்ற திமுக கூட்டத்தில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன், நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்தார். திமுகவின் நலத்திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.



Coimbatore: திருப்பூர் தெற்கு மாவட்டம் ஒருங்கிணைந்த பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய திமுக பொதுகுழு உறுப்பினர்கள் கூட்டம் பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர், கிளைச் செயலாளர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் போது, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு எவ்வாறு களப்பணி ஆற்ற வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.



கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனிடம், நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், "ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கினாலும் எங்களுக்கு ஆட்சேபனையும் இல்லை, வருத்தமும் இல்லை. அதே நேரத்தில் திமுகவிற்கு கூடுதலான வாக்குகள் கிடைத்து வருகிறது," என்றார்.

மேலும் அவர், "கடந்த மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய முதல்வரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் பொதுமக்கள், குறிப்பாக பெண்களுக்கு மத்தியில் அன்பைப் பெற்றுள்ளது. திமுக கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர். எனவே, எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர்," என்று தெரிவித்தார்.

Newsletter

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...