யார் அரசியலுக்கு வந்தாலும் கவலையில்லை, மக்கள் எங்கள் பக்கம் - அமைச்சர் மு.பெ. சாமிநாதன்

பொள்ளாச்சி அருகே நடைபெற்ற திமுக கூட்டத்தில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன், நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்தார். திமுகவின் நலத்திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.



Coimbatore: திருப்பூர் தெற்கு மாவட்டம் ஒருங்கிணைந்த பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய திமுக பொதுகுழு உறுப்பினர்கள் கூட்டம் பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர், கிளைச் செயலாளர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் போது, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு எவ்வாறு களப்பணி ஆற்ற வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.



கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனிடம், நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், "ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கினாலும் எங்களுக்கு ஆட்சேபனையும் இல்லை, வருத்தமும் இல்லை. அதே நேரத்தில் திமுகவிற்கு கூடுதலான வாக்குகள் கிடைத்து வருகிறது," என்றார்.

மேலும் அவர், "கடந்த மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய முதல்வரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் பொதுமக்கள், குறிப்பாக பெண்களுக்கு மத்தியில் அன்பைப் பெற்றுள்ளது. திமுக கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர். எனவே, எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர்," என்று தெரிவித்தார்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...