கோவையில் அனுமதியின்றி இயங்கும் லாட்ஜ் மீது நடவடிக்கை கோரி பாஜக மனு: மேயர் மீது அரசியல் குற்றச்சாட்டு

கோவை ராமலட்சுமி நகரில் அனுமதியின்றி இயங்கும் ஐஸ்வர்யா லாட்ஜ் மீது நடவடிக்கை கோரி பாஜக மனு அளித்துள்ளது. மேயர் மீது அரசியல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை ராமலட்சுமி நகரில் இயங்கி வரும் ஐஸ்வர்யா லாட்ஜ் அனுமதியின்றி இயங்கி வருவதாகவும், அங்கு சில சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வருவதாகவும் கூறி அந்த லாட்ஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக தொழில் பிரிவு மாநில துணைத்தலைவர் செல்வகுமார் ஊர் பொதுமக்கள் சார்பில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய செல்வகுமார், கோவை கோல்ட் விங்ஸ் பகுதியில் பழமை வாய்ந்த சிவன் கோவில் இருப்பதாகவும், இந்த கோவிலுக்கு அருகில் உள்ள ஐஸ்வர்யா லாட்ஜ் மாநகராட்சியிடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் செயல்பட்டு வருவதாகவும் கூறினார். அந்த லாட்ஜில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினார்.



மேலும், அந்த லாட்ஜின் உரிமையாளர் ஆளுங்கட்சியினரின் ஆதரவுடன் லாட்ஜின் வாகன வசதிக்காக இந்த கோவிலை இடிக்க முயற்சிப்பதாகவும், இதற்கு முன்பிருந்த கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இந்த கோவிலை இடிக்க முயற்சி செய்ததாகவும் கூறினார். தற்பொழுது உள்ள புதிய மேயரும் கோவிலை இடிக்க முயற்சிப்பதாகவும், இவ்விவகாரத்தில் பாஜக பொதுமக்களை திரட்டி போராடும் எனவும் கூறினார்.

அந்த லாட்ஜ் குறித்து ஆர்டிஐ செய்து பார்த்த பொழுது அனுமதி அளித்ததற்கான ஆவணங்கள் மாநகராட்சியிடம் இல்லை என்று பதில் தரப்பட்டதாக குறிப்பிட்டார். அந்த லாட்ஜை விற்றுக் கொடுத்தால் கமிஷன் கிடைக்கும் என்ற காரணத்திற்காக புதிய மேயர் கோவிலை இடிக்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இது குறித்து அளிக்கப்பட்ட மனுவில் லாட்ஜ் இருப்பது மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அது தவிர அப்பகுதியில் கோவில் இருப்பதையோ மேயரின் தலையீட்டையோ கோவிலை இடிக்க முயற்சிப்பதையோ குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...