கோவை ரேஸ்கோர்ஸில் ஜல்லிக்கட்டு காளை சிலை: விரைவில் திறப்பு

கோவை ரேஸ்கோர்ஸில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டு காளை சிலை அமைக்கப்பட்டுள்ளது. 1 டன் எடையுள்ள இந்த சிலை விரைவில் திறக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.


Coimbatore: கோவை மாநகராட்சி பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸில் ஜல்லிக்கட்டு காளை சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் குளக்கரைகள் புனரமைப்பு, பொழுதுபோக்கு அமசங்கள் ஏற்படுத்துதல், 24 மணி நேர குடிநீர்த் திட்டம், பன்னடுக்கு வாகன நிறுத்தம், மாதிரிச் சாலை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ரேஸ்கோர்ஸ் ரவுண்டானா பகுதியில் தனியார் பங்களிப்புடன் ஜல்லிக்கட்டு காளை சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரேஸ்கோர்ஸ் பகுதியில் குதிரைப் பந்தயத்தை நினைவுகூறும் வகையில், ஏற்கெனவே குதிரைச் சிலை வைக்கப்பட்டுள்ளது. தற்போது, அந்தக் குதிரை சிலை அமைந்துள்ள இடத்தின் மறுபகுதியில் மக்களைக் கவரும் வகையில் ஜல்லிக்கட்டு காளையின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஃபைபர், அலுமினியம், வெண்கலம் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த சிலையின் எடை 1 டன். இச்சிலை விரைவில் திறக்கப்பட உள்ளது," என்று தெரிவித்தார்.

இந்த ஜல்லிக்கட்டு காளை சிலை அமைப்பதன் மூலம், கோவை நகரின் அழகு மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளதோடு, தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கும் சிறப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சிலை கோவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...