தியாகராஜ பாகவதர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட ஆணை: தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவை நடத்திய பாராட்டு விழா

கோவை ராஜவீதியில் M.K தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விஸ்வகர்மா பேரவை தலைவர் பாண்டியன் தலைமையில் முப்பெரும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது.


Coimbatore: தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் ஏழிசை மன்னர் M.K தியாகராஜா பாகவதர் பிறந்தநாள் விழா கோவை ராஜவீதியில் உள்ள தேர்நிலைத்திடல் அருகே வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவானது தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவை நிறுவனர் மற்றும் தலைவர் பாண்டியன் தலைமையில் தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவை நடத்தும் முப்பெரும் விழா மற்றும் பொதுக்கூட்டமாக நடைபெற்றது.

விழாவில் பத்தாம் வகுப்பில் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்ற திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த தனிஷ்கா என்ற மாணவிக்கு பரிசளித்து பாராட்டி பரிசு தொகை வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அனைத்து தங்க நகை தொழிலாளர் சங்கத்தின் 21-ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி நிர்வாகிகள் மற்றும் விஸ்வகர்மா சமுதாயத்திற்கான பாடுபடும் சமுதாய தலைவர்களுக்கு பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவை நிறுவனர் மற்றும் தலைவர் பாண்டியன், தமிழகத்தில் பொற்கொல்லர் நல வாரியம் முடங்கி இருப்பதாகவும் அதனை கைவினையாளர்கள் நல வாரியம் என மாற்ற வேண்டும் எனவும் கூறினார். தச்சு தொழிலாளர்கள், பொற்கொல்லர்கள், பாத்திரம் வேலை செய்பவர்கள், சிற்பம் வேலை செய்பவர்கள் உள்ளிட்ட ஐந்து தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படவில்லை எனவும், தமிழக அரசு அவற்றை முறையாக செயல்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் பாண்டியன் கேட்டுக் கொண்டார். தொழிலில் வறுமையில் இருப்பதால் தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் எனவும், தொழிலாளர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பதால் தமிழக அரசு வீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...