கோவை பன்னீர்மடையில் திராவிட நட்புக்கழகத்தின் 'நட்பு பாராட்டுவோம்' நிகழ்ச்சி

கோவை பன்னீர்மடையில் திராவிட நட்புக்கழகம் சார்பில் 'நட்பு பாராட்டுவோம்' என்ற தலைப்பில் உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரையாற்றினார். சாதி, மத பேதமின்றி அனைவரும் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டது.



Coimbatore: கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னீர்மடையில் திராவிட நட்புக்கழகம் சார்பில் 'நட்பு பாராட்டுவோம்' என்ற தலைப்பில் உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திராவிட நட்புக்கழகத்தின் தலைவர் சிங்கராயர் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் அசன் முகம்மது முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திமுக பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் சி.எம்.கிருஷ்ணகுமார் கலந்துக்கொண்டார்.

திராவிட இயக்கத்தமிழர் பேரவைத் தலைவரும், திராவிட நட்புக்கழகத்தின் நிறுவனரும், தமிழ்நாடு அரசின் சமூக நீதி கண்காணிப்புக்குழுத் தலைவருமான பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், "சாதி மறுப்பாளர்கள், பெண் சமத்துவம் பேணுபவர்கள், எந்தவித மத நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும் திராவிட நட்புக்கழகத்தில் இணைந்து செயல்படலாம்" என்று கூறினார்.



மேலும் அவர், "சாதிமதமற்ற, ஆண் பெண் சமநிலை பேணும் சமத்துவம், வெறுப்பு அரசியலை அகற்றி மதநல்லிணக்கம் பேணுதல், சமூக நீதியை நிலைநாட்டச் செயல்படவேண்டும்" என்று வலியுறுத்தினார். இளைஞர்களை நோக்கி, "சமூக வலைத்தளங்களில் முற்போக்குக் கருத்துகளைப் பதிவிட்டு உலகமெல்லாம் பரப்பவேண்டும். அதுவே தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ந்த தற்போதைய காலத்தின் செயல்பாடாகும்" என்று கூறினார்.



இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய துணைச் செயலாளர் சிவக்குமார், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் சூரியன் தம்பி, விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் மு.கனகராஜ், தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பி.டி.கோபால்சாமி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திராவிட நட்புக்கழகம் மாநில துணைப் பொதுச் செயலாளர் விஜயராணி செய்திருந்தார். மண்டல அமைப்பாளர் வழக்குரைஞர் முருகேசன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...